Wednesday, October 29, 2008

சென்னை சிறந்த போக்குவரத்து வசதி உள்ள நகரமா?

உலகின் மூன்றாவது சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக சென்னையும், எட்டாவது சிறந்த போக்குவரத்து வசதி கொண்ட நகரமாக மும்பையும் உள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை கூறுகிறது.

நெசம்தான் சொல்றாங்களா? என்னால கொஞ்சம் கூட நம்ப முடியல... நீங்க என்ன சொல்லறீங்க?

அப்போ, அம்பதாவது, நூறாவது இடத்துல இருக்கற நகரங்கள பத்தி யோசிக்க கூட முடியல...

http://www.forbes.com/2008/10/28/commute-cities-world-forbeslife-cx_mw_1028realestate_slide_9.html?thisSpeed=30000

Friday, October 24, 2008

தமிழன்

தமில் ஈலம் வேண்டி போராடும் இந்த மர(மற) தமிலர்களை அலைத்து சென்று யாராவது 'ழகரம்' சொல்லிக்கொடுத்தால் நல்லது.

தமிழை கொலை செய்யும் இவர்கள், இனப்படுகொலைக்காக போராடுகிறார்கள். இவர்களது தமிழ் கொலைக்கு எதிராக, யாராவது போராட வேண்டும் போல இருக்கிறது.

Wednesday, October 22, 2008

மொடாசிலா மதராஸ்பட்டேன்சிஸ்



இந்த பறவையின் பெயர் "மொடாசிலா மதராஸ்பட்டேன்சிஸ்". (Motacilla madaraspatensis) இது சிட்டுக்குருவி வகையை சார்ந்த ஒரு பறவையினம்.

இந்தியாவை தாயகமாக கொண்டது. இந்த பறவையினத்தின் வயிற்றுப்பகுதி வெள்ளை நிறமாகவும், கழுத்துப்பகுதி கருப்பு நிறத்துடனும் காணப்படும். என்ன திடீர் என்று இந்த பறவை பற்றி என்று தானே நினைக்கிறீர்கள்!. பறவையின் பெயர் நமது மெட்ராஸ் பட்டினத்தின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. (Thanks TOI).

Saturday, October 18, 2008

சந்திரயான்

சந்திரயான், சமஸ்கிரதத்தில் 'நிலவு வாகனம்' என்று அர்த்தம். 2003 ஆம் ஆண்டு, சுதந்திர தின விழாவில், திரு. வாஜ்பாய் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் கனவு திட்டம் சந்திரயான். 2008 ஆம் ஆண்டில் ஏவப்படும் என்று அறிவித்தார்.

அந்த நாள் வந்து விட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி காலை 6.20 மணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PSLV செலுத்து வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

இந்த செயற்கை கோள், தானே சூரிய ஒளியில் இருந்து, மின்சாரத்தை (approx 700W) தயாரித்து கொள்ளும் . விண்ணில் 590 கிலோ எடை கொண்டதாக இருக்கும். செலுத்து வாகனத்தில் அல்லது செயற்கை கோளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் சரி செய்யவும், செலுத்து வாகனம் பாதை மாறினால், ஆழ் விண் தொடர்பு ?! (Deep Space Network) மூலம் சரியான பாதைக்கு திருப்பிவிடவும் இயலும்.

இந்த ஆளில்லா செயற்கை கோள் மூலம் இந்தியாவுக்கு என்ன லாபம்? எதற்கு இந்தியா இதில் 400 கோடி ரூபாய்களை கொட்ட வேண்டும்?

உலகத்தில் எரிபொருள் தேவை அதிகரித்து வரும் அதே வேளையில், இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு வழிகளை ஆராய்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த நிலவு செயற்கை கோள்கள், நிலவு ஆராய்ச்சி மையங்கள் போன்ற பல.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் புதிதாக இதில் இணைந்துள்ளது. மேற்கண்ட நாடுகள், கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.

சரி, விஷயத்துக்கு வருவோம். எரிபொருளுக்கும் நிலவுக்கும் என்ன சம்பந்தம்?

தற்போதைய நுக்ளியர் மின் உற்பத்தியில் ஹைட்ரஜன் ஐசோடோப்புகளும், ட்ரிதியம் மற்றும் ட்யூட்ரியம் எரிபொருளாக பயன்படுகின்றன. மேலும், யூரேனியத்தையும், ப்ளுடேனியத்தையும் பிரித்து கதிரியக்கத்தை வெளி விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இது மிகவும் செலவு பிடிக்கும் விஷயமாகவும், பாதுகாப்பு குறைவானதாகவும் மற்றும் நீண்ட நாள் பயனளிக்க இயலாத வகையிலும் உள்ளது. இந்த குறை பாட்டை போக்க கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஹீலியம் இந்த குறைபாட்டை ஓரளவு போக்கும் என்று கண்டறிந்தனர். மேலும், ஹீலியம்-3 பாதுகாப்பானது. தற்போதைய எரிபொருள்கள் போல் இல்லாமல் மிகக் குறைவாக கதிரியக்கத்தை வெளிவிட கூடியது . ஆனால் ஹீலியம் உலகில் மிக அரிதான ஒன்று

உலகில் மிக அரிதான ஹீலியம் 3(helium-3), நிலவில் அதிகமாக இருப்பதாக தெரிந்ததில் இருந்து தான் எல்லா நாடுகளும் நிலவை ஆராய (exploring moon)போட்டி போடுகின்றன

நிலவில் 11,00,000 மெட்ரிக் டன் ஹீலியம்-3 இருப்பதாக கூறப்படுகிறது. இதை 600 டிகிரி செண்டிகிரேட்டில் சூடு படுத்துவதன் மூலம் பூமிக்கு கொண்டு வர முடியும்.

ஹீலியத்தை பூமிக்கு கொண்டு வருவது செலவு பிடிக்கும் சமாசாரம் என்றாலும், எல்லா நாடுகளும் கவலை படாமல் பணத்தை தண்ணீராக இறைக்க காரணம், நாளைய எரிபொருள் தேவை. இந்தியாவிடம் ஹீலியம் இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தற்போதைய எண்ணை வள நாடுகள் போல் இந்தியாவும் செழிப்பாக ஆக முடியும். இதை கருத்தில் கொண்டு தான் இந்தியாவும் சந்திரயான்-1 முதல் சந்திரயான்-5 வரை திட்டம் வைத்து உள்ளது.

இதெல்லாம் சாத்தியப்பட்டால், கூடிய விரைவில் இந்திய பொருளாதாரம் PSLV போல் மேலே போக உதவியாக இருக்கும்.

Friday, October 17, 2008

பொருளாதாரம்

'இந்தியா ஒருநாள் பொருளாதார வல்லரசாகும்'

நான் கூட நம்பி இருந்தேன், 'நமது பொருளாதாரம் அமெரிக்க பொருளாதரத்தை மிஞ்சி சென்று விடும்' என்று...

பின்னே அமெரிக்க பொருளாதாரம் நம்மை விட கிழே போனால், நாம மேல வரத்தானே செய்வோம்.

சப்புன்னு ஆயிருச்சு....

Thursday, October 9, 2008

தானியங்கி மூவுருளி

"தானியங்கி மூவுருளின்னா என்னண்ணே?"

"அதாண்டா 'ஆட்டோ' வத்தான் அப்படி சொல்லராங்கடா"

"அப்போ ஆட்டோமொபைல்னா என்ன சொல்லறது?"

"ம்ம்... 'நடமாடும் தானியங்கி'ன்னு வச்சுக்க, ஏன்டா நான் என்ன தமிழ் பண்டிட்டா?"

"டெலிபோன்னா, தொலை பேசி தானே அண்ணே?"

"அதுல என்னடா சந்தேகம் உனக்கு?"

"டெலிவிஷன்னா, தொலைக்காட்சி தான அண்ணே?"

"ஆமடா டே"

"டெலிகிராம்ன்னா ஏன் அண்ணே 'தொலைநிறை'ன்னு பேரு வைக்காம 'தந்தி'ன்னு பேர் வச்சாங்க?"

"டே ஓடிப்போயிரு"

Sunday, October 5, 2008

பகுத்தறிவு வாதி

பகுத்தறிந்து, கடவுள் உண்டு என்று கண்டாலும், நான் பகுத்தறிவு வாதி ஆக முடியாது?!

பகுத்தறிந்தால், எப்படி குறிப்பிட்ட மத நம்பிக்கைகளும், சடங்குகளும் மட்டும் கேலிக்குரியதாகின்றன?

தலைவர் சிலைக்கு மாலை போட்டால் பகுத்தறிவு, சாமி சிலைக்கு மாலை போட்டால்....

தலைவர் சமாதிக்கு சென்று கும்பிட்டு நின்றால் பகுத்தறிவு, சாமி சிலைக்கு முன் கும்பிட்டு நின்றால்...

தமிழில் பல்வேறு விளக்கங்கள் உள்ள ஒரே வார்த்தையாக பகுத்தறிவு விளங்குவது ஒரு சாதனை தான் போங்கள்.

Wednesday, October 1, 2008

மிடோரி (operating system)

மிடோரி ஆப்ரடிங் சிஸ்டம் பற்றி நிறைய வதந்திகளும், தகவல்களும் பரப்பப்படுகின்றன. மிடோரி விண்டோசின் எமன் என்றும், இல்லை நண்பன் என்றும் செய்திகள் உலவுகின்றன...

மிடோரி என்றால் பச்சை என்று ஜப்பான் மொழியில் அர்த்தமாம். உலகில் உள்ள ஆபெரடிங் சிஸ்டம்களில் விண்டோஸ் 80 சதவிகித இடத்தை பிடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்று உள்ளது. இவ்வளவு பெரிய சந்தையை இழக்க மைக்ரோசாஃப்ட் விரும்புமா ? இவ்வளவு பிரம்மாண்டமான வளர்ச்சியை மிடோரி பெறுமா?

மிடோரியை சந்தை படுத்துவதில் உள்ள சிரமங்களை களைய மைக்ரோசாஃப்ட் ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. நிபுணர்களின் கருத்துப்படி மிடோரி விண்டோசுடன் சேர்ந்து பயன்ப்படுமாறே அமைக்கப்படும். அதனால் விண்டோசின் சந்தையையும் இழக்காமல் புதிய ஆபெரடிங் சிஸ்டத்தை பயன் பாட்டில் கொண்டு வர முடியும் என்று கருதுகிறார்கள்.

மிடோரி தற்போதுள்ள நடைமுறை சிரமங்கள் அனைத்தையும் களைவதாக அமையும் என கருதப்படுகிறது. தகவல் பரிமாற்றம், இணைய நடைமுறை (connectedness) சிக்கல்கள் மற்றும் பல சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.

எரிக் ராட்டேர், துணை இயக்குனர், டெக்னாலஜி அவர்கள் தலைமையில் இந்த மிடோரி உருவாக்கபடுவதாக கூறப்படுகிறது. மிடோரியை வெளியிடுவது பற்றி இன்னும் யோசிக்கவில்லை என்றும் அது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்!...