Monday, June 1, 2009

வார்த்தை!

வார்த்தை ஒருவரை காயப்படுத்தும்
வார்த்தை ஒருவரை சிரிக்கவைக்கும்
வார்த்தை
ஒருவரை வருத்தப்பட வைக்கும்

வார்த்தை ஒருவரை மகிழ வைக்கும்
வார்த்தை ஒருவரை நிதானப்படுத்தும்
வார்த்தை ஒருவரை மாய்க்கும்
வார்த்தை ஒருவரை அல்லல் படுத்தும்

கொடுத்த வாக்குக்காக உயிர் துறந்தவர்கள் உண்டு, இன்னல் அடைந்தவர் உண்டு திருக்குறளும் வாக்கை காக்க சொல்லுகிறது. வாக்கில் உறுதியும் இனிமையும்
வேண்டும் என்றார் பாரதியார்.

வார்த்தை (வாக்கு) ஒரு காற்று என்றால் மனிதன் ஏன் அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறான்?

வாக்கு
செயலுக்கு அடித்தளமாகிறது. வாக்குறுதி அடிப்படையில் தேர்தல்கள் நடை பெறுகின்றன.
கடவுளை நம்பாதவர்கள் கூட வார்த்தைகளை நம்புகின்றனர்.

வார்த்தைக்கு புரிதல் முக்கியமாகிறது, புரியாத மொழியில் வரும் வார்த்தை எந்த பயனையும், தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை. புரியாத மொழியில் வரும் வார்த்தை மௌனம் ஆகுமா? புரியவில்லை! ஒலி இருப்பதால் அது மௌனம் ஆகாது எனில் புரியாத சத்தத்தின் பெயர் என்னவோ?

எது எப்படி இருந்தாலும் - ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்.