Friday, September 26, 2008
மரம் நடுவது எப்படி?
ஐயா, ஒரு மரக்கன்னு நட்டு இருக்கியளா? ஆர்வமாவது இருக்கா? இருந்தா, இத படிங்க...
நீங்க மரம் (கன்னு) நட தீர்மானம் பண்ணிட்டீங்கன்னு வச்சுக்குங்க, முதல்ல எங்க நடரதுன்னு முடிவு பண்ணிட்டு அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளருமுன்னு தெரிஞ்சுக்குங்க, போதுமான சூரிய ஒளி கிடைக்குமான்னு பாத்துக்குங்க, அந்த மரம் வளர போதுமான இடம் இருக்கான்னு பாருங்க...
அப்புறம் முக்கியமான ஒண்ணு என்னன்னா, வேருக்கு நல்ல தண்ணி கிடைக்குமான்னு பாத்துக்கங்க, அப்பதான் ஆக்ஸிஜன் நிறைய கிடைக்கும். கொஞ்சம் நல்ல வடிகால் வசதி இருந்தா ரொம்ப நல்லதுங்க...
பன்னிரண்டு மீட்டர் அகலதுலயும் பன்னிரண்டு மீட்டர் ஆழதுலயும் ஒரு குழிய வெட்டி தண்ணி ஊத்தி சோதனை பண்ணி பாருங்க, தண்ணி வடிய ஆறு மணி நேரத்துக்கும் மேல ஆச்சுன்னா, வேற இடம் பாக்கறது உசிதமுங்க.
இதெல்லாம் சரி பாத்து நட்டுடீங்கன்னா, இப்போ மனுஷ பய கிட்ட இருந்தும், ஆடு, மாடு, பூச்சி கிட்ட இருந்தும் காப்பாதனுன்க. கொஞ்சம் இயற்கை உரம் நல்லதுங்க... சரியான அளவு தண்ணி ஊத்தி............... :)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment